தமிழ்நாட்டில் இல்லத்தார் / இல்லத்துப்பிள்ளைமார் என்றும் கேரளாவில் ஈழவர் , தீயர் என்றும் கர்நாடகாவில் பில்லவாஸ் , பூஜாரிகள் , கவுட் , பண்டாரி என்றும் ஆந்திர தெலுங்கானாவில் ஈடிகா என்றும் அழைக்ப்படும் சமூகம் தமிழ்நாட்டு இல்லத்துப்பிள்ளைமார் என்கிற சீர்குடி வேளாளர் சமூகம் ஆகும். தமிழ்நாட்டில் ரிஷிமூலம் அறியமுடியாத சமூகங்களில் ஒன்று இல்லத்தார் சமூகம் ஆகும். இல்லத்தார் என்ற சொல்லுக்கு அர்த்தம் வீட்டுக்காரர் அதாவது இல்லம் என்ற உட்பிரிவு வைத்திருக்கும் தமிழ்நாட்டு பூர்வக்குடிமக்கள் ஆவர். ஈழம் என்றழைக்கப்பட்ட இலங்கை வரை பரவி வாழ்ந்து பல்வேறு உலக சாம்ராஜ்யங்களுடன் வாணிப , ராஜ்ஜிய தொடர்புகளை மேற்கொண்டவர்கள் என்பதால் ஈழவர்கள் என்றும் அழைக்கப்பட்ட சமூகத்தினர். நிரூபிக்கும் ஆதாரங்கள்: ஈழவ / இல்லத்தார் சமூக மக்கள் தொன்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தொல்லியல் அகழாய்வுகளிலும் தமிழ் சங்க இலக்கிய வரலாற்று ஆவணங்களிலும் பொதிந்து கிடக்கின்றன. ஆதி ஆதிச்சநல்லூர்: இல்லத்தார் சமூக மக்களின் தொன்மையை பறைசாற்றும் முக்கியமான தொல்லியல் களம் பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை...
உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளுக்கு தலைவரும் வாடிகன் நாட்டின் இறையாண்மை பொருந்தியவருமான போப் பிரான்சிஸ் ஸ்ரீ நாராயணகுருவையும் அவரது கருத்துகளையும் விதந்தோதி பேசியிருப்பது ஸ்ரீ நாராயணா இயக்கத்திற்கு உலக அளவிலான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. 1924ம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புழாவிற்கு அருகில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் ஸ்ரீ நாராயணகுரு நடத்திய அனைத்துலக மதநல்லிணக்க மாநாட்டின் நூற்றாண்டு நிறைவு விழா கிருஸ்தவ தலைநகரான வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் கடந்த 30 நவம்பர் தேதியில் நடைபெற்றது. அதில் கேரளாவிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் , பல்வேறு மத சமூக தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வுக்கு தலைமை தாங்கிய போப் பிரான்சிஸ் நூறாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ நாராயணகுரு பேசிய வார்த்தைகள் தற்போதைய உலக சூழலுக்கு அப்படியே பொருந்தி போகிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் , இன்றைய உலகம் மதம் மற்றும் நாடுகளால் பிரிந்து பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் அதற்கு ஸ்ரீ நாராணகுருவின் போதனைகள் தீர்வாக அமையும் எனவும் போப் தொிவித்தார். எல்லா மதங்களின் அடிநா...