முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாராயணகுரு மீது தமிழ் மண் செலுத்திய தாக்கம் என்ன.?

    நாராயணகுரு கேரளாவில் பிறந்து மலையாள மக்களின் வாழ்கையை உயர்த்திய மகான் என்பதாக மட்டுமே நமக்கு அவரைத் தெரியும். ஆனால் நாராயணகுருவின் வாழ்கையின் பெரும்பங்கை செதுக்கியது நம் தமிழ்நாட்டு மண் தான் என்பதும், அவரது ஆன்மீக சிந்தனைகளுக்கு அடித்தளமிட்டது நம் தமிழ் மண்ணின் மகத்தான ஆளுமைகள் தான் என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாத பேருண்மையாகும்.

நாணுவின் பிறப்பு:

மலையாள நாட்டில் திருவனந்தபுரம் நகருக்கு அருகில் செம்பழந்தி என்னும் அழகிய சிற்றூரில் வயல்வாரம் என்னும் வீட்டில் ஆயுர்வேத வைத்தியரான மாடன் ஆசானுக்கும் – குட்டிஅம்மைக்கும் மகனாக பிறந்தார் நாராயணகுரு. தந்தை மற்றும் தாய்மாமா வழங்கிய இளவயது குருகுல கல்வியால் நாராயணகுரு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் மிகுந்த புலமை பெற்றார். மற்ற ஈழவ சமூகத்தினர் ஆயுர்வேத மருத்துவத்திற்கு மட்டும் சமஸ்கிருதத்தை படித்துக் கொண்டிருந்த வேளையில் நாராயணகுரு வேத கருத்துகளையும் சுலோகங்களையும் சமஸ்கிருதத்தில் படித்து தோ்ந்தார். பின்னர், தமிழர் தைக்காடு அய்யவு மூலம் தமிழின் ஆகச்சிறந்த அறநூல்களான திருக்குறள் மற்றும் இதர சிவ வழிபாட்டு நூல்களை கற்றுத் தோ்ந்து அதில் ஆழந்த புலமை அடைந்தார்.

மருந்துவாழ் மாமலையில் கடும் தவம்:

நாராயணகுருவின் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்திற்கு அடுத்து மருந்துவாழ் மாமலையில் அவர் சுமார் 8 ஆண்டுகள் மேற்கொண்ட கடும் தவம் ஆகும். புத்தருக்கு போதி மரம் ஞானத்தை வழங்கியது போல நாராயணன் ஆசானை நாராயணகுருவாக உயர்த்தியது நம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முக்கடல் எல்லைக்கு அருகே அமைந்துள்ள மருந்துவாழ்மலை என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த மலையின் உச்சியில் நின்று பார்த்தால் முக்கடல்களையும் ரசிக்க முடியும். தென்இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் இடமே அந்த மருந்துவாழ் மலைதான். அதன் உச்சியில் இருந்து கொண்டுதான் எட்டு ஆண்டுகள் கடுமையான தவத்தை மேற்கொண்டு நாராயணகுருவாக எழுந்தார் குரு.

அருவிப்புரம் சிவபிரதிஷ்டை:

குமரியில் கடும் தவத்தை மேற்கொண்ட பின்னர் அவர் நேராக சென்றது அருவிப்புரம் என்ற ஊருக்கு. அங்கே பொதிகை மலையிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதியான நெய்யாறு நதியில் மூழ்கி தமிழர்களின் ஆதி தெய்வமான சிவலிங்கத்தை எடுத்து அனைத்து மக்களும் வேறுபாடுகள் இன்றி வழிபடுவதற்கு ஒரு சிவன் கோவிலை நிர்மாணித்தார். நாராயணகுருவின் அந்த செயல்பாடு கேரள, தென்தமிழ்நாட்டு வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு.!

திருக்குறள், தேவார பதிகங்கள்:

தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த நாராயணகுரு திருவள்ளுவரின் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். தூய தமிழில் தேவார பதிகங்கள் என்ற ஆன்மீக பாடல் நூலினை குரு படைத்துள்ளார். சிதம்பரம் கோவிலுக்கு வந்த குரு, அந்த கோவிலின் பிரம்மாண்டத்தை உணர்ந்து சிதம்பரட்ஷகம் என்று சமஸ்கிருத ஸ்லோக நூலினை இயற்றியுள்ளார். இது தவிர ரமண மகரிஷி, குன்றக்குடி ஆதினம், கோவிலூர் ஆதினம், மதுரை, திருச்செந்தூர் சித்தாந்த மடங்கள், திருநெல்வேலி, கோட்டாறு ஆகிய இடங்களில் கோவில் என தமிழ் மண்னை சுற்றி சுழன்று வாழ்ந்து மறைந்துள்ளார் குரு.

மலையாள நாட்டில் பிறந்து தமிழ் மண்ணின் தத்துவ மகனாக வாழ்ந்து தென்னிந்தியா முழுவதும் செழிக்க பாடுபட்டு மறைந்துள்ளார் மகாகுரு.!

-       வாழிய அவர்தம் புகழ்.!

- Sree Narayana Tamil (19/12/2024)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இல்லத்தார் ஏன் பிள்ளை பட்டத்தை பயன்படுத்துகிறோம்.?

தமிழ்நாட்டில் இல்லத்தார் என்ற பெயரில் வாழ்ந்து வரும் முக்கியமான சமூகத்தினரான நாம் "பிள்ளை" என்ற பட்டத்தை ஏன் பயன்படுத்துகிறோம். அதன் வரலாறு என்ன என்பது குறித்து காண்போம். பிள்ளை பட்டம் : " பிள்ளை" என்ற சொல் தமிழ்மொழிக்கு சொந்தமானது. சங்க காலத் தமிழ் மொழியிலிருந்து இருந்து இந்த சொல் பிறந்துள்ளது. "பிள்ளை" என்ற சொல்லுக்கு "ராஜாவின் பிள்ளை - (மகன்)" "அரசனின் பிள்ளை" என்று பொருள் படும். நமது பக்கத்து மாநிலமான கேரளத்தை ஆண்ட சேர மன்னர்களின் வாரிசுகளின் தொடர்ச்சி தான் இப்போதைய திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர். அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சமூகத்தில் இராணுவம் மற்றும் பொது சேவைகளில் ஈடுபட்டவர்களுக்கும் பிள்ளை என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளனர்.   எனவே , திருவிதாங்கூர் ராஜா குடும்பத்தாரால் கேரள , தமிழ்நாட்டில் வசித்த தாய்வழி சமூகமான நமக்கு வழங்கப்பட்ட பட்டமே பிள்ளை என்ற பட்டமாகும். திருவிதாங்கூர் அரச பரம்பரையினரும் தாய் வழி உறவை கடைபிடிக்கும் குடும்பத்தினரே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இல்லத்தார் = இல்லத்துப்பிள்ளை ஆனோம்...

ஈழவர், இல்லத்தார் என்ற ஆதி தமிழ் குடியினர்.!

  தமிழ்நாட்டில் இல்லத்தார் / இல்லத்துப்பிள்ளைமார் என்றும் கேரளாவில் ஈழவர் , தீயர் என்றும் கர்நாடகாவில் பில்லவாஸ் , பூஜாரிகள் , கவுட் , பண்டாரி என்றும் ஆந்திர தெலுங்கானாவில் ஈடிகா என்றும் அழைக்ப்படும் சமூகம் தமிழ்நாட்டு இல்லத்துப்பிள்ளைமார் என்கிற சீர்குடி வேளாளர் சமூகம் ஆகும். தமிழ்நாட்டில் ரிஷிமூலம் அறியமுடியாத சமூகங்களில் ஒன்று இல்லத்தார் சமூகம் ஆகும். இல்லத்தார் என்ற சொல்லுக்கு அர்த்தம் வீட்டுக்காரர் அதாவது இல்லம் என்ற உட்பிரிவு வைத்திருக்கும் தமிழ்நாட்டு பூர்வக்குடிமக்கள் ஆவர். ஈழம் என்றழைக்கப்பட்ட இலங்கை வரை பரவி வாழ்ந்து பல்வேறு உலக சாம்ராஜ்யங்களுடன் வாணிப , ராஜ்ஜிய தொடர்புகளை மேற்கொண்டவர்கள் என்பதால் ஈழவர்கள் என்றும் அழைக்கப்பட்ட சமூகத்தினர். நிரூபிக்கும் ஆதாரங்கள்: ஈழவ / இல்லத்தார் சமூக மக்கள் தொன்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தொல்லியல் அகழாய்வுகளிலும் தமிழ் சங்க இலக்கிய வரலாற்று ஆவணங்களிலும் பொதிந்து கிடக்கின்றன. ஆதி ஆதிச்சநல்லூர்: இல்லத்தார் சமூக மக்களின் தொன்மையை பறைசாற்றும் முக்கியமான தொல்லியல் களம் பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை...