உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளுக்கு தலைவரும் வாடிகன் நாட்டின் இறையாண்மை பொருந்தியவருமான போப் பிரான்சிஸ் ஸ்ரீ நாராயணகுருவையும் அவரது கருத்துகளையும் விதந்தோதி பேசியிருப்பது ஸ்ரீ நாராயணா இயக்கத்திற்கு உலக அளவிலான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
1924ம் ஆண்டு கேரள மாநிலம் ஆழப்புழாவிற்கு அருகில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் ஸ்ரீ நாராயணகுரு நடத்திய அனைத்துலக மதநல்லிணக்க மாநாட்டின் நூற்றாண்டு நிறைவு விழா கிருஸ்தவ தலைநகரான வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் கடந்த 30 நவம்பர் தேதியில் நடைபெற்றது. அதில் கேரளாவிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும், பல்வேறு மத சமூக தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்வுக்கு தலைமை தாங்கிய போப் பிரான்சிஸ் நூறாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ நாராயணகுரு பேசிய வார்த்தைகள் தற்போதைய உலக சூழலுக்கு அப்படியே பொருந்தி போகிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இன்றைய உலகம் மதம் மற்றும் நாடுகளால் பிரிந்து பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும் அதற்கு ஸ்ரீ நாராணகுருவின் போதனைகள் தீர்வாக அமையும் எனவும் போப் தொிவித்தார். எல்லா மதங்களின் அடிநாதமும் ஒன்றே என ஸ்ரீ நாராயணகுரு தொிவித்த கருத்தை தானும் வழிமொழிவதாக போப் பிரானசிஸ் நிகழ்வில் தொிவித்துள்ளார்.
ஸ்ரீ நாராயணா இயக்கத்திற்கு மாபெரும் அங்கீகாரம்:
ஸ்ரீ நாராயணகுருவின் கருத்துகளும் போதனைகளும் ஏற்கனவே தெற்காசியா மற்றும் அரேபிய நாடுகளில் வாழும் பல்வேறு இன மக்களால் பெரிய அளவில் மதிப்பளிக்கப்ட்டு வரும் நிலையில் முதல் முறையாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமைபீடமான வாடிக்கனில் போப் அவர்களாலேயே புகழப்பட்டுள்ள நிகழ்வு ஸ்ரீ நாராயணகுரு இயக்கத்திற்கு மாபெரும் உலக அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச சிந்தனையாளர் - குரு
ஸ்ரீ நாராயணகுருவை சர்வதேச அரசியல் சிந்தனையாளராக
உலகம் உணரத்தொடங்கியிருப்பதற்கான சமிஞ்சை இது என சர்வதேச மத, சமூக நல்லிணக்கவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக