முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இல்லத்தார் ஏன் பிள்ளை பட்டத்தை பயன்படுத்துகிறோம்.?


தமிழ்நாட்டில் இல்லத்தார் என்ற பெயரில் வாழ்ந்து வரும் முக்கியமான சமூகத்தினரான நாம் "பிள்ளை" என்ற பட்டத்தை ஏன் பயன்படுத்துகிறோம். அதன் வரலாறு என்ன என்பது குறித்து காண்போம்.

பிள்ளை பட்டம்:

"பிள்ளை" என்ற சொல் தமிழ்மொழிக்கு சொந்தமானது. சங்க காலத் தமிழ் மொழியிலிருந்து இருந்து இந்த சொல் பிறந்துள்ளது. "பிள்ளை" என்ற சொல்லுக்கு "ராஜாவின் பிள்ளை - (மகன்)" "அரசனின் பிள்ளை" என்று பொருள் படும். நமது பக்கத்து மாநிலமான கேரளத்தை ஆண்ட சேர மன்னர்களின் வாரிசுகளின் தொடர்ச்சி தான் இப்போதைய திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர். அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சமூகத்தில் இராணுவம் மற்றும் பொது சேவைகளில் ஈடுபட்டவர்களுக்கும் பிள்ளை என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளனர்.  எனவே, திருவிதாங்கூர் ராஜா குடும்பத்தாரால் கேரள, தமிழ்நாட்டில் வசித்த தாய்வழி சமூகமான நமக்கு வழங்கப்பட்ட பட்டமே பிள்ளை என்ற பட்டமாகும். திருவிதாங்கூர் அரச பரம்பரையினரும் தாய் வழி உறவை கடைபிடிக்கும் குடும்பத்தினரே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இல்லத்தார் = இல்லத்துப்பிள்ளை ஆனோம்:

இல்லம் என்னும் தாய்வழி உட்பிரிவு கொண்டு திருமண உறவுமுறைகளை நாம் சீராக மேற்கொண்டுவந்ததால் நாம் இல்லத்தார் என்றும் மேற்படி பிள்ளை பட்டத்தோடு சோ்ந்து இல்லத்துபிள்ளைமார் என்றும் நாம் அழைக்கப்படுகின்றோம். பிறர் கூறுவது போல யாரையோ பார்த்து நாம் இந்த பட்டத்தை சோ்த்துக்கொள்ளவில்லை. வில்லவர்கள் என அழைக்கப்பட்ட சேர மன்னர்களின் வாரிசுகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் இல்லத்தாரான நமக்கு வழங்கப்பட்டது தான் பிள்ளை பட்டம். மேலும் பிள்ளை பட்டத்துடன் சோ்ந்து  பணிக்கர் பட்டத்தையும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் ்இல்லத்தாரான நமக்கு வழங்கினர்.

மேலும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தில் உள்ள ராணிகளுக்கும் இளவரசி பெண்களுக்கும் பாய் என்ற பட்டம் பெயருக்கு பின்னால் உள்ளது. அதே பட்டம் தென்தமிழ்நாட்டு இல்லத்துப்பிள்ளைமார்கள் வீட்டு பெண்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளதை அவர்களின் பழைய ஆவணங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

எனவே பிள்ளை என்ற பட்டத்தை பயன்படுத்த இல்லத்தாரான நமக்கு முழு ராஜ உரிமை உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈழவர், இல்லத்தார் என்ற ஆதி தமிழ் குடியினர்.!

  தமிழ்நாட்டில் இல்லத்தார் / இல்லத்துப்பிள்ளைமார் என்றும் கேரளாவில் ஈழவர் , தீயர் என்றும் கர்நாடகாவில் பில்லவாஸ் , பூஜாரிகள் , கவுட் , பண்டாரி என்றும் ஆந்திர தெலுங்கானாவில் ஈடிகா என்றும் அழைக்ப்படும் சமூகம் தமிழ்நாட்டு இல்லத்துப்பிள்ளைமார் என்கிற சீர்குடி வேளாளர் சமூகம் ஆகும். தமிழ்நாட்டில் ரிஷிமூலம் அறியமுடியாத சமூகங்களில் ஒன்று இல்லத்தார் சமூகம் ஆகும். இல்லத்தார் என்ற சொல்லுக்கு அர்த்தம் வீட்டுக்காரர் அதாவது இல்லம் என்ற உட்பிரிவு வைத்திருக்கும் தமிழ்நாட்டு பூர்வக்குடிமக்கள் ஆவர். ஈழம் என்றழைக்கப்பட்ட இலங்கை வரை பரவி வாழ்ந்து பல்வேறு உலக சாம்ராஜ்யங்களுடன் வாணிப , ராஜ்ஜிய தொடர்புகளை மேற்கொண்டவர்கள் என்பதால் ஈழவர்கள் என்றும் அழைக்கப்பட்ட சமூகத்தினர். நிரூபிக்கும் ஆதாரங்கள்: ஈழவ / இல்லத்தார் சமூக மக்கள் தொன்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தொல்லியல் அகழாய்வுகளிலும் தமிழ் சங்க இலக்கிய வரலாற்று ஆவணங்களிலும் பொதிந்து கிடக்கின்றன. ஆதி ஆதிச்சநல்லூர்: இல்லத்தார் சமூக மக்களின் தொன்மையை பறைசாற்றும் முக்கியமான தொல்லியல் களம் பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை...

நாராயணகுரு மீது தமிழ் மண் செலுத்திய தாக்கம் என்ன.?

     நாராயணகுரு கேரளாவில் பிறந்து மலையாள மக்களின் வாழ்கையை உயர்த்திய மகான் என்பதாக மட்டுமே நமக்கு அவரைத் தெரியும் . ஆனால் நாராயணகுருவின் வாழ்கையின் பெரும்பங்கை செதுக்கியது நம் தமிழ்நாட்டு மண் தான் என்பதும் , அவரது ஆன்மீக சிந்தனைகளுக்கு அடித்தளமிட்டது நம் தமிழ் மண்ணின் மகத்தான ஆளுமைகள் தான் என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாத பேருண்மையாகும். நாணுவின் பிறப்பு: மலையாள நாட்டில் திருவனந்தபுரம் நகருக்கு அருகில் செம்பழந்தி என்னும் அழகிய சிற்றூரில் வயல்வாரம் என்னும் வீட்டில் ஆயுர்வேத வைத்தியரான மாடன் ஆசானுக்கும் – குட்டிஅம்மைக்கும் மகனாக பிறந்தார் நாராயணகுரு. தந்தை மற்றும் தாய்மாமா வழங்கிய இளவயது குருகுல கல்வியால் நாராயணகுரு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் மிகுந்த புலமை பெற்றார். மற்ற ஈழவ சமூகத்தினர் ஆயுர்வேத மருத்துவத்திற்கு மட்டும் சமஸ்கிருதத்தை படித்துக் கொண்டிருந்த வேளையில் நாராயணகுரு வேத கருத்துகளையும் சுலோகங்களையும் சமஸ்கிருதத்தில் படித்து தோ்ந்தார். பின்னர் , தமிழர் தைக்காடு அய்யவு மூலம் தமிழின் ஆகச்சிறந்த அறநூல்களான திருக்குறள் மற்றும் இதர சிவ வழிபாட்டு நூல்களை கற்றுத் ...