தமிழ்நாட்டில் இல்லத்தார் என்ற பெயரில்
வாழ்ந்து வரும் முக்கியமான சமூகத்தினரான நாம் "பிள்ளை" என்ற பட்டத்தை
ஏன் பயன்படுத்துகிறோம். அதன் வரலாறு என்ன என்பது குறித்து காண்போம்.
பிள்ளை பட்டம்:
"பிள்ளை" என்ற சொல்
தமிழ்மொழிக்கு சொந்தமானது. சங்க காலத் தமிழ் மொழியிலிருந்து இருந்து இந்த சொல்
பிறந்துள்ளது. "பிள்ளை" என்ற சொல்லுக்கு "ராஜாவின் பிள்ளை -
(மகன்)" "அரசனின் பிள்ளை" என்று பொருள் படும். நமது பக்கத்து
மாநிலமான கேரளத்தை ஆண்ட சேர மன்னர்களின் வாரிசுகளின் தொடர்ச்சி தான் இப்போதைய
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர். அவர்கள் தங்களது குடும்ப
உறுப்பினர்களுக்கும் சமூகத்தில் இராணுவம் மற்றும் பொது சேவைகளில்
ஈடுபட்டவர்களுக்கும் பிள்ளை என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளனர்.
எனவே, திருவிதாங்கூர்
ராஜா குடும்பத்தாரால் கேரள, தமிழ்நாட்டில் வசித்த
தாய்வழி சமூகமான நமக்கு வழங்கப்பட்ட பட்டமே பிள்ளை என்ற பட்டமாகும்.
திருவிதாங்கூர் அரச பரம்பரையினரும் தாய் வழி உறவை கடைபிடிக்கும் குடும்பத்தினரே
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இல்லத்தார் = இல்லத்துப்பிள்ளை ஆனோம்:
இல்லம் என்னும் தாய்வழி உட்பிரிவு கொண்டு
திருமண உறவுமுறைகளை நாம் சீராக மேற்கொண்டுவந்ததால் நாம் இல்லத்தார் என்றும்
மேற்படி பிள்ளை பட்டத்தோடு சோ்ந்து இல்லத்துபிள்ளைமார் என்றும் நாம்
அழைக்கப்படுகின்றோம். பிறர் கூறுவது போல யாரையோ பார்த்து நாம் இந்த பட்டத்தை
சோ்த்துக்கொள்ளவில்லை. வில்லவர்கள் என அழைக்கப்பட்ட சேர மன்னர்களின் வாரிசுகளாக
தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால்
இல்லத்தாரான நமக்கு வழங்கப்பட்டது தான் பிள்ளை பட்டம். மேலும் பிள்ளை பட்டத்துடன்
சோ்ந்து
பணிக்கர்
பட்டத்தையும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினர் ்இல்லத்தாரான நமக்கு
வழங்கினர்.
மேலும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தில் உள்ள
ராணிகளுக்கும் இளவரசி பெண்களுக்கும் பாய் என்ற பட்டம் பெயருக்கு பின்னால் உள்ளது.
அதே பட்டம் தென்தமிழ்நாட்டு இல்லத்துப்பிள்ளைமார்கள் வீட்டு பெண்களுக்கும்
பயன்படுத்தி வந்துள்ளதை அவர்களின் பழைய ஆவணங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
எனவே பிள்ளை என்ற பட்டத்தை பயன்படுத்த
இல்லத்தாரான நமக்கு முழு ராஜ உரிமை உள்ளது
என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக