தமிழ்நாட்டில் இல்லத்தார்/இல்லத்துப்பிள்ளைமார் என்றும் கேரளாவில் ஈழவர், தீயர் என்றும் கர்நாடகாவில் பில்லவாஸ், பூஜாரிகள், கவுட், பண்டாரி என்றும் ஆந்திர தெலுங்கானாவில் ஈடிகா என்றும் அழைக்ப்படும் சமூகம் தமிழ்நாட்டு இல்லத்துப்பிள்ளைமார் என்கிற சீர்குடி வேளாளர் சமூகம் ஆகும்.
தமிழ்நாட்டில் ரிஷிமூலம்
அறியமுடியாத சமூகங்களில் ஒன்று இல்லத்தார் சமூகம் ஆகும். இல்லத்தார் என்ற சொல்லுக்கு
அர்த்தம் வீட்டுக்காரர் அதாவது இல்லம் என்ற உட்பிரிவு வைத்திருக்கும் தமிழ்நாட்டு பூர்வக்குடிமக்கள் ஆவர். ஈழம் என்றழைக்கப்பட்ட இலங்கை வரை பரவி வாழ்ந்து பல்வேறு உலக சாம்ராஜ்யங்களுடன்
வாணிப, ராஜ்ஜிய தொடர்புகளை மேற்கொண்டவர்கள் என்பதால் ஈழவர்கள்
என்றும் அழைக்கப்பட்ட சமூகத்தினர்.
நிரூபிக்கும் ஆதாரங்கள்:
ஈழவ/இல்லத்தார் சமூக
மக்கள் தொன்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தொல்லியல் அகழாய்வுகளிலும்
தமிழ் சங்க இலக்கிய வரலாற்று ஆவணங்களிலும் பொதிந்து கிடக்கின்றன.
ஆதி ஆதிச்சநல்லூர்:
இல்லத்தார் சமூக மக்களின் தொன்மையை பறைசாற்றும் முக்கியமான தொல்லியல் களம் பொருநை
என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் என்ற
பழம்பெரும் ஊராகும். அங்கு 3,200 ஆண்டுகள் பழமையான தொன்ம முதுமக்கள் தாழிகள் கிடைக்கும்
இடத்திற்கு அருகில் இல்லத்தார் சமூக மக்கள் மட்டுமே வழிபடும் மலையரசி அம்மன்
சாஸ்தா கோவிலாகும். ஈழத்து அரசி என்றும் தீரன் தம்பிரான் என்றும் அழைக்கப்படும்
சாஸ்தா கோவில் 3,200 ஆண்டுகள் பழமையான ஆதிச்சநல்லூர் தொல்லியல் மேட்டில்
அமைந்துள்ளது ஈழவ இல்லத்தார் சமூக மக்களின் தொன்மைக்கும் வரலாற்று பெருமைக்கும்
புகழ் சோ்க்கும் தெய்வீக அம்சமாகும்.
சிவகளை என்னும் தொல்லியல் பெட்டகம்:
ஆதிச்சநல்லூருக்கு அருகில் பொருநை
நதியின் வடகரையில் அமைந்துள்ள சிவகளை ஊரும் இல்லத்தார் சமூக மக்கள் கணிசம்
வசிக்கும் ஊராகும். அந்த ஊரில் நடந்த அகழாய்வுகளும் 3,200 ஆண்டுகள் பழமையான நெல்மணிகள் கொண்ட
ஈமதாழிகளை கண்டுபிடித்தது. அந்த இடத்திற்கு அருகில் தான் இல்லத்தார் சமூக மக்களின்
குலதெய்வங்களுள் ஒன்றான பொய்சொல்லான் மெய்யர் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.
இவ்வாறாக தொன்மையும் தெய்வீகமும் இணைந்த
சமூகமாக தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திர,தெலுங்கானாவில் ஈழவ இல்லத்தார் சமூக மக்கள் வாழ்ந்து
வருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக